கொடைக்கானல் புனித பீட்டர்ஸ் பள்ளியில், 29 ஆவது ஆண்டு பெற்றோர் தின விழா நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, பள்ளித் தாளாளர் சாம்பாபு தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவரும், கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவருமான முகமது இப்ராஹிம் முன்னிலை வகித்துப் பேசினார். பள்ளி உதவித் தாளாளர் ரோகன் சாம்பாபு வரவேற்றார். பள்ளி முதல்வர் மைக்கேல் ஜோஸ்வா ஆண்டறிக்கை வாசித்தார்.
நிகழ்ச்சியில், பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள் மற்றும் சிறந்த மாணவர்களுக்கான பரிசுகளை, மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் தவமணி கிறிஸ்டோபர் வழங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந் நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாகி நிர்மலா சாம்பாபு மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!
நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது!

உலகக் கோப்பையின் முதல் திருட்டு: ஹைதி தோல்விக்கு ஃபிஃபாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


