பிகாரில் நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பிகாரின் முசாஃபர்பூர் நகரில் நீட் தேர்வு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான போலி வினாத்தாள்களை மாணவர்களிடமும், பெற்றோரிடமும் ஏமாற்றி விற்ற 4 பேரை அம்மாநில காவல்துறை நேற்று மாலை கைது செய்தது.
கைதான ஹர்ஷ், அமன் குமார், கன்னையா குமார் மற்றும் ஹர்ஷ் கனோடியா ஆகியோரிடமிருந்து 3 மொபைல் போன்களும், போட்டித் தேர்வுகளுக்கான போலி வினாத்தாள்களும் கைப்பற்றப்பட்டன.
”கைதான நபர்கள் ஒரு வலையமைப்பின் கீழ் சமூக வலைதளங்கள் மூலம் நீட் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளின் போலி வினாத்தாள்களை பெற்றோரிடமும் மாணவர்களிடமும் விற்று வந்தனர். இதுபற்றி முன்பு இதே புகாரில் கைதான மனிஷ் ஜா அளித்த புகாரின் பேரில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டனர்” என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், “விசாரணையில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் நபர்களிடம், தங்களிடம் தேர்வு வினாத்தாள் இருப்பதாக ஏமாற்றி சமூக வலைதளங்கள் மூலம் போலி வினாத்தாள்களை விற்றுள்ளனர்.
அதற்கான பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் வங்கி கணக்கில் அனுப்பச் சொல்லி, அதனை மணீஷ் ஜாவிடம் ஒப்படைத்து வந்தனர்” என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
Summary
Individuals arrested for selling fake NEET question papers!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் மறுதேர்வு: விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் வினாத்தாள்கள்!
நீட் வினாத்தாள் கசிவு: மருத்துவர், இயற்பியல் ஆசிரியர் கைது!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



