கால்பந்து உலகக் கோப்பை 2026ல் ஸ்காட்லாந்து அணியின் வரலாற்று வெற்றியில் நடுவரால் நிகழ்ந்த சர்ச்சை சமூக வலைதளத்தில் மிகப்பெரிய விமர்சனங்களைக் கிளப்பியுள்ளன.
குரூப் சி பிரிவில் ஹைதி - ஸ்காட்லாந்து அணிகள் மோதிய போட்டியில் ஸ்காட்லந்து அணி 1-0 என வென்றது. ஸ்காட்லாந்து அணி 1990க்குப் பிறகு தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. இருந்தும் இந்தப் போட்டியில் நடந்த ஹேண்ட்பால் சர்ச்சை அதனை விஞ்சியுள்ளது.
இந்தப் போட்டியின் 79ஆவது நிமிஷத்தில் ஹைதியின் மிட்ஃபீல்டர் ஜீன்-ரீகினேர் பெல்லேகார்டே அடித்த பந்தை ஸ்காட்லாந்தின் டிஃபெண்டர் கிராண்ட் ஹான்லி பெனால்டி பாக்ஸுக்குள் கைகளால் தடுத்திருப்பார்.
கால்பந்து விதியின்படி பெனால்டி பாக்ஸுக்குள் கைகளால் தடுத்தால் ஹேண்ட்பால் விதிமீறலுக்கு ஹைதி அணிக்கு பெனால்டி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கள நடுவரும் விஏஆர் நடுவடும் பெனால்டி கொடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ் பக்கத்தில் கால்பந்து ரசிகர் ஒருவர், “என் வாழ்க்கையில் பார்த்த மிகப்பெரிய திருட்டு இதுதான். கைகள் எங்கிருக்கிறது எனப் பாருங்கள். ஹைதியிடம் இருந்து ஸ்காட்லாந்து திருடி வென்றுள்ளது” எனக் கூறியுள்ளார்.
இந்தப் போட்டியில் தோற்றாலும் கவனம் பெற்ற ஹைதி அடுத்த போட்டியில் பிரேசிலுடன் மோத, ஸ்காட்லாந்து மொராக்கோவுடன் மோதுகிறது.
ஹைதி அணியின் சீருடையில் அரசியல் தொடர்பான படங்கள் இருந்ததால் அதனை தடை செய்து வேறு சீருடையை மாற்றும்படி ஃபிஃபா அறிவுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
THIS IS A PENALTY FOR HAITI, NO IFS ANDS OR BUTS, ABSOLUTELY ROBBED
— luff ðµð¸ (@F1reFistLuffy) June 14, 2026
The defender's arm should NEVER be that far out, a clear handball to disrupt a shot on goal.
I am ALMOST CERTAIN that they looked at the wrong shot for review, because they showed a different replay soon after. pic.twitter.com/XjwjXpJvmp
Summary
Robbery in FIFA world cup 2026? Scotland vs Haiti marred by bad referee as fans outrage over social media
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











