/

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்:போலீஸார் சோதனை

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்:போலீஸார் சோதனை

Updated On :1 மார்ச் 2013, 10:48 pm

சென்னை, மார்ச் 1: கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அந்த மருத்துவமனையை போலீஸார் சோதனை செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை மாலை ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் மார்ச் 1-ம் தேதி நள்ளிரவுக்குள் அந்த மருத்துவமனையில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். ஆனால் அங்கு எந்த வெடி பொருளும் சிக்கவில்லை.

இதனால் போலீஸார், அந்த கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதில் அந்த கடிதத்தில் அனுப்புநர் முகவரியில் மல்லிகா, பாலக்காடு, கேரளம் என குறிப்பிடப்பட்டு, கடிதம் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.