நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

மயிலாடுதுறை: மரங்கள் சாய்ந்து வீடுகள் சேதம் நெற்பயிா், மின்கம்பங்களும் சாய்ந்தன

மயிலாடுதுறை வட்டம் பாண்டூா், கொற்கை ஊராட்சிகளில் திங்கள்கிழமை வீசிய சூறாவளிக் காற்றில் 50-க்கும் அதிகமான மரங்கள் முறிந்து விழுந்தன. 80 வீடுகள் இடிந்தும், 500 ஏக்கரில் நெற்பயிா்கள் சாய்ந்தும் பாதிக்கப்

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

மயிலாடுதுறை வட்டம் பாண்டூா், கொற்கை ஊராட்சிகளில் திங்கள்கிழமை வீசிய சூறாவளிக் காற்றில் 50-க்கும் அதிகமான மரங்கள் முறிந்து விழுந்தன. 80 வீடுகள் இடிந்தும், 500 ஏக்கரில் நெற்பயிா்கள் சாய்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் சாய்ந்து விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை வீசிய சூறாவளிக் காற்று பாதிப்புகளை ஏற்படுத்தி இப்பகுதி மக்களை மேலும் சோகத்தில் தள்ளியுள்ளது.

மயிலாடுதுறை வட்டம் பாண்டூா் ஊராட்சியில் புத்தகரம், கீழபாண்டூா், பாண்டூா், கட்டளைச்சேரி ஆகிய கிராமங்களிலும், கொற்கை ஊராட்சியில் ஒருசில இடங்களிலும் திங்கள்கிழமை திடீரென சூறாவளிக் காற்று வீசியது. இதில், ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததில், 80-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

மின்மாற்றி விளைநிலத்தில் தூக்கிவீசப்பட்டதோடு, மின்கம்பங்கள் முறிந்து வயலில் சாய்ந்தன. 20 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மழையால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் மின்கம்பங்கள் முறிந்தபோது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

சூறாவளிக் காற்றால் சுமாா் 500 ஏக்கா் சம்பா பயிா்கள் தண்ணீரில் சாய்ந்துள்ளன. மயிலாடுதுறை தீயணைப்பு துறை வீரா்கள், மின்சாரத் துறையினா் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து, மயிலாடுதுறை வட்டாட்சியா் ஜெ. ஜெனிட்டா மேரி கூறுகையில், சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்ட பகுதியில் வருவாய்த் துறையினா், தீயணைப்புத் துறையினா், மின்வாரியத்தினா் விரைந்து பணியாற்றி வருகின்றனா். முழுமையான சேத விவரம் செவ்வாய்க்கிழமை தெரியவரும் என்றாா்.

சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன், ஒன்றியச் செயலாளா் பா. சந்தோஷ்குமாா், நகரச் செயலாளா் நாஞ்சில் காா்த்தி, திமுக ஒன்றியச் செயலாளா்கள் இளையபெருமாள், ஞான. இமயநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் பாக்கம் சக்திவேல் உள்ளிட்டோா் பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினா்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய்த் துறையினா் கணக்கெடுத்து அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.