சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நிதி நிறுவன பெண் அதிபர் படுகொலை

புவனேசுவரம் ரசூல்கரில் உள்ள சபர் சாஹி பகுதியில் உள்ள தனது வீட்டில் நிதி நிறுவன பெண் அதிபரான பச்சன்சுதா

Updated On :12 செப்டம்பர் 2013, 5:19 am

புவனேசுவரம் ரசூல்கரில் உள்ள சபர் சாஹி பகுதியில் உள்ள தனது வீட்டில் நிதி நிறுவன பெண் அதிபரான பச்சன்சுதா பட்நாயக் (55) புதன்கிழமை நண்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்று தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை கேபிடல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரைக் கடுமையாகத் தாக்கி கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளதாக போலீஸார் கூறினர். புவனேசுவரத்தில் மதுகான் நிதி நிறுவனத்தை பச்சன்சுதா நடத்தி வந்தார். அவரை வெளியாட்கள் கொன்றிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டவரின் கணவர் மதுசரண் பட்நாயக் வேறுவிதமாக கூறினார். இந்த படுகொலையில் காலை வேளையில் பணியில் இருந்த பாதுகாவலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று மதுசரண் சந்தேகம் தெரிவித்தார்.

சம்பவத்துக்குப் பிறகு அந்த பாதுகாவலர் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரை தேடி வருவதாகவும் அதிகாரி குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.