தில்லியில் தயபஸ்தி - சக்குர்பஸ்தி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கார் சிக்கிக் கொண்டதால் அப்பகுதி வழியாக ரயில்களை இயக்குவதில் சுமார் ஒரு மணி நேரம் தடங்கல் ஏற்பட்டது.
இதனால், சென்னை - ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயில் தயபஸ்தி ரயில் நிலையத்தில் அதிகாலை 12.52 மணி முதல் 2. 28 மணி வரை நிறுத்திவைக்கப்பட்டது என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 12.45 மணியளவில் ரயில்வே தண்டவாளத்தில் டாடா சஃபாரி கார் ஒன்று சிக்கிக் கொண்டது. கார் ஓட்டுநரின் கவனக் குறைவால் இது நேர்ந்தது. உடனடியாக ரயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டனர். சிக்கிய கார் தண்டவாளத்தில் இருந்து காலை 2.10 மணிக்கு அகற்றப்பட்டது.
இது தொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்று ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் கமல்ஹாசன்!

இயக்குநர் இமயம் பாரதிராஜா! வாழ்க்கைத் தடம் - புகைப்படங்களில்!

இயக்குநர்கள் உருவாக பாதை அமைத்து தந்த பிதாமகன் பாரதிராஜா: சேரன் இரங்கல்!

திரையுலகைப் புரட்டிப்போட்ட பாரதிராஜாவின் 16 வயதினிலே!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


