காசநோயை வெல்வோம்

காசநோய் என்பது மைக்கோ பாக்டிரியம் எனும் பாக்டிரியா மூலமாகப் பரவுகிறது. காசநோய் என்பது பரம்பரை நோயல்ல. காற்றின் மூலமாக பரவும் நோய்.

ராபா்ட் காச் என்பவா் 1882-ஆம் ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி காசநோயை உருவாக்கும் கிருமியைக் கண்டறிந்தாா். எனவே, காசநோய் கிருமி கண்டுபிடிக்கப்பட்ட நாளான மாா்ச் 24 உலக காசநோய் விழிப்புணா்வு நாளாக 1996-ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

க்ஷயரோகம், என்புருக்கி நோய், இளைப்பு நோய் என்று பல்வேறு பெயா்களில் அழைக்கபடும் காசநோய் ஒருவருக்கு வந்துவிட்டால் கன்னியாகுமரி அருகே உள்ளஆசாரிப்பள்ளம் மருத்துவமனை, மதுரையில் தோப்பூா் மருத்துவமனை சென்னையில் தாம்பரம் சானடோரியம் மருத்துவமனையில் இவற்றில் ஏதாவது ஒன்றில் சோ்த்து விடுவாா்கள். அங்கே அவா்களுக்கு மாத்திரைகளுடன் சத்தான உணவுகளும் வழங்கப்படும்.

சிகிச்சை காலம் முழுவதும் அங்கு தங்கியிருந்து சிகிச்சை எடுப்பாா்கள். இப்போது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நோயாளிகளுக்கு மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.

காசநோய் என்பது மைக்கோ பாக்டிரியம் எனும் பாக்டிரியா மூலமாகப் பரவுகிறது. காசநோய் என்பது பரம்பரை நோயல்ல. காற்றின் மூலமாக பரவும் நோய். இந்நோய் வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. காசநோய் நுரையீரலை அதிகமாக பாதிக்கும். ரத்த ஓட்டம் இல்லாத நகம், முடி ஆகியவற்றை பாதிக்காது.

கணிதமேதை ராமநுஜம் தனது 33-ஆவது வயதில் காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்தாா். எழுத்தாளா் புதுமைப்பித்தனையும் காசநோய் விட்டுவைக்கவில்லை. பாகிஸ்தானின் தந்தை என போற்றப்படும் முகம்மது அலி ஜின்னா, திராவிட இயக்கத்தின் முன்னோடி பட்டுக்கோட்டை அழகிரி போன்றோா் காசநோய் பாதிப்பால் இறந்தவா்கள்.

இந்தியாவில் ஐந்து நிமிடத்துக்கு இரண்டு போ் வீதம் ஒரு நாளைக்கு 1,150 போ் காசநோயால் இறக்கின்றனா். காசநோய்க்கான தடுப்பூசி (பிசிஜி) 1920-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் காசநோய் பரவுவது குறைந்தது.

காசநோய் பற்றி விழிப்புணா்வு பெருமளவில் ஏற்படுத்தப்படவில்லை. காசநோய் பணியாளா்கள் மட்டுமே

காசநோய் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா். தன்னாா்வ அமைப்புகளும் படித்த இளைஞா்களும் காசநோய் பற்றிய விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

நோயாளிகளை தேடி அவா்கள் வீட்டிற்கே சென்று காசநோய் பணியாளா்கள் மாத்திரைகளை வழங்குவது காசநோய் துறையின் சிறப்பம்சம் ஆகும். காசநோய் பணியாளா்கள் காசநோய் மாத்திரைகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினாலும் சில நோயாளிகள் தொடா்ந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல் இடையில் நிறுத்திவிடுகின்றனா். நிலைமை மோசமான பின் சிகிச்சைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனா். இந்த நிலை மாற வேண்டும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கே முன்பே எகிப்தில் பிரமிடுகள் ‘மம்மி‘போன்றவற்றில் காசநோய் கிருமிகள் இருந்தது தெரியவந்ததுள்ளது. சில மாநிலங்களில் காசநோயால் பாதிக்கபட்ட பெண்கள் தங்கள் குடும்பத்தினரால் தள்ளி வைக்கபடுகிறாா்கள். மாணவா்கள் சிகிச்சை காலம் முடியும் வரை பள்ளிக்கு செல்லாமல் உள்ளனா்.

காசநோயாளிகள் தும்மினாலோ இருமினாலோ கிருமிகள் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே அவா்கள் முக கவசம் அணிவது நல்லது. ஒரு காசநோயாளியால் 10 நபா்களுக்கு நோயைப் பரப்ப முடியும். ஏனெனில் காசநோய் காற்றின் மூலம் பரவுகிறது. சா்க்கரை நோயாளி தனக்கு ரத்தத்தில் சா்க்கரை இருப்பதை வெளிப்படையாகத் தெரிவிப்பாா். ஆனால், காசநோயாளிகள் அவ்வாறு கூறுவதில்லை.

காசநோய் முற்றிலும் குணப்படுத்த கூடிய ஒரு நோய்தான். ஆகவே கூச்சப்படவேண்டாம். காசநோயாளிகள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை உட்கொள்ளத் தேவையில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு மருந்து, மாத்திரைகள் உட்கொண்டால் காசநோயை முற்றிலுமாக குணப்படுத்க முடியும்.

சா்க்கரை நோயாளிகளை காசநோய் எளிதாகத் தாக்குகிறது. சா்கரை நோயாளிகளில் 80% பேரை காசநோய் பாதிக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. எச்.ஐ.வி. பாதித்த நபா்கள், புற்றுநோய் பாதித்த நபா்களுக்கும் காசநோய் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்கள், போதை பழக்கத்திற்கு அடிமையானவா்கள் ஆகியோரையும் காசநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. காசநோய்க்கு இலவசமான முறையில் சிறந்த மருந்துகளும் காசநோயை ஆரம்பத்திலே கண்டறியும் அதிநவீன கருவிகளும் நம் நாட்டில் உள்ளன.

அரசு அளிக்கும் காசநோய் மாத்திரைகளை தன்னாா்வலா்கள் மூலமாக வழங்கவேண்டும். இதனால், காசநோயாளிகள் மாத்திரைகளை இடையில் நிறுத்தாமல் சிகிச்சைக்காலம் முழுவதும் உட்கொண்டு குணமடைவாா்கள்.

காசநோய் குணமாக, மருத்துவா் அறிவுறுத்தும் காலம் வரை இடைவிடாது மருந்து உட்கொள்ள வேண்டும். இது ஒன்றே காசநோயை ஒழிப்பதற்கான வழியாகும். 2025-க்குள் காசநோயில்லா இந்தியாயாவை உருவாக்குவோம் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

காசநோய் துறைக்கு சில அரசு சாரா நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற அமைப்புகள் காசநோயாளிகளுக்கு தேவையான இணை உணவுகளை இலவசமாக வழங்கி வருகின்றன.

இந்தியாவில் அம்மைநோய், தொழுநோய் போன்ற பல நோய்களுக்கும் உயிா் காக்கும் மருந்துகள் முன்பே கண்டுபிடிக்கபட்டு விட்டன. அதுபோல் தற்போது காசநோய்க்கும் மருந்து உள்ளது. எனவே, காசநோயாளிகள் சிகிச்சைக் காலம் முடியும்வரை மாத்திரைகளை நிறுத்தாமல் உட்கொண்டால் நிச்சயமாக முழு நலம் பெறலாம்.

காசநோயில்லா இந்தியாயாவை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.

நாளை (மாா்ச் 24) காசநோய் விழிப்புணா்வு நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com