ஆடம் டஸ் கூறியுள்ளதாவது “கார் ஓட்டுநர் இல்லாமல் தானே இயங்குவதைப் படம் பிடிக்க அந்த காரின் அருகில் சென்றபோதுதான் தெரிந்த காரின் இருக்கையின் அடியில் மறைந்து அமர்ந்தவாறு ஒருவர் அந்தக் காரை இயக்குவது, அதைக்கண்டு முதலில் நான் அதிர்ந்து போனாலும் அந்த ஓட்டுநரிடம் கார் ஓடிக்கொண்டிருக்கும் போதே சில கேள்விகளை கேட்டேன், ஆனால் எதற்கும் பதில் அளிக்காமல் சாலை சிக்னலையும் பொருட் படுத்தாமல் காரை அந்த நபர் அதி விரைவாக இயக்கிச்சென்று விட்டார்”. ஆனால், ஓட்டுநர் இருப்பதை காரின் கண்ணாடி வழியாக இவர் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது.