தன் ஆளை பினாமி ஆக்கி ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் பெரிய பழுவேட்டரையர் அவருக்கு உதவும் சிறிய பழுவேட்டைரையர், சூதுக்குத் துணை போகும் குட்டி மன்னர்கள், இளவரசனைக் கொல்ல நினைக்கும் சூழ்ச்சி, பழிவாங்கத் துடிக்கும் வீரபாண்டியனின் மனைவி நந்தினி, அவளை இயக்கும் மந்திரவாதி, ரவிதாசன், இளவரசர்களைக் காப்பாற்ற துடிக்கும் வந்தியதேவன், அவனை கண்டதும் காதல் கொள்ளும் குந்தவை, ஆட்சி தன் மகனுக்கு வேண்டாம் என நினைக்கும் மகாராணி செம்பியன் மாதேவி, பூக்காரனாக ஒளிந்து வளரும் மகன் சேந்தன் அமுதன், அவன் காதலி பூங்குழலி என மனதை ஆக்கிரமிக்கும் பல பல கதாபாத்திரங்களுடன் ஒற்றன் ஆழ்வார்கடியானும் மகாமந்திரி அனிருத்தர பிரம்மதேவராயர் எல்லோரும் சேர்ந்து சதிகளை முறியடிக்க ஆதித்த கரிகாலன் மர்ம மரணம் அடைய பொன்னியின் செல்வனைத் தேடி வருகிறது மணிமுடி.