கமலஹாசனைப் பற்றி கட்டுரை எழுதலாம் என்றெண்ணியவுடன் வார்த்தைகள் இப்படித்தான் கும்மாளமடிக்கின்றன. உண்மையான அக்னோஸ்டிக்கு, ‘கடவுள் இல்லை', என்ற நிலையையும், ‘கடவுள் இருக்கிறார்', என்ற நிலையையும் சம தூரத்தில் வைத்துப் பார்க்கும் பக்குவம் அவசியம். ஆனால், உலகத்தின் பெருவாரியான அக்னோஸ்டிக்குகள், நாத்திகர்கள் என்பது ஒரு கூடுதல் தகவல். அப்படிப் பார்த்தால் அக்னோஸ்டிக்கள் நாத்திகர்கள் ஒளிந்துகொள்ளும் ஒரு கூடாரம் என்று கூடச் சொல்லலாம். நாம் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். கடவுள் நம்பிக்கை சார்ந்த விஷயத்தைப் பொறுத்தவரை, ஆத்திகர், நாத்திகர், அக்னோஸ்டிக்', என்ற மூன்று நிலைதான் இருக்க முடியும். ஆனால், நேற்று கமலஹாசன், ‘ஒரு சிலர் என்னை நாத்திகன் என அழைப்பதை நான் ஏற்கவில்லை. நான் ‘பகுத்தறிவாளன்', என்று பேசியிருக்கிறார்.