நவம்பர் 27: தெலங்கானாவில் 26 வயது கால்நடை பெண் மருத்துவர், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வழியில் மாயமானார்.
நவம்பர் 28: மாயமான பெண் மருத்துவரின் உடல் எரிந்த நிலையில், ஷத்நகர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
நவம்பர் 29: இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநர் உட்பட 20 வயது முதல் 24 வயதுடைய நான்கு பேர் கைது செய்யப்படுகிறார்கள். இவர்கள் திட்டமிட்டு, அப்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நவம்பர் 30: தேசிய அளவில் இந்த சம்பவம் கவனத்தை பெற்றது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுகிறார்கள்.
டிசம்பர் 2 : நாடாளுமன்றத்தில் இந்த சம்பவம் எதிரொலிக்கிறது.
டிசம்பர் 4 : இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து, குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க தெலங்கானா அரசு உத்தரவிடுகிறது.
டிசம்பர் 6 : குற்றம் நடந்தது எப்படி என நடித்துக் காட்ட சம்பவ இடத்துக்கு குற்றவாளிகளை போலீஸார் அழைத்துச் சென்றனர். அவர்கள் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயலும் போது என்கவுன்டரில் நால்வரும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.