மனிதர்கள் பொம்மை போன்ற உயிரற்ற பொருள்களை மணந்து கொள்வது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே பலர் நாம் சிந்திக்கவே முடியாத பலவற்றை திருமணம் செய்து கொண்டுள்ளனர். கடந்த 2007-ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த லியூ யே தன்னைத் தானே மணந்து கொண்டார். தன்னைத் தானே மணந்து கொள்ள பல்வேறு காரணங்கள் இருந்தாலும், யதார்த்தத்தின் மீதான திருப்தியின்மைக் காரணமாகவே இவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளார். இதேபோன்று நெதர்லாந்தைச் சேர்ந்த ஜெனிபர் ஹோஸ் என்ற பெண் கடந்த 2003-ஆம் ஆண்டு தனது 30-ஆவது பிறந்தநாளில் தன்னைத் தானே மணந்து கொண்டார். கடந்த 2010-ஆம் ஆண்டு தைவானைச் சேர்ந்த 30-வயது பெண் சென் வெய் இஃக், சமூக அழுத்தத்தின் காரணமாக திருமணம் செய்ய முடிவெடுத்த பின்னரும், தனக்கான சரியான துணை கிடைக்காததால் தன்னைத் தானே மணந்து கொண்டார்.