செங்கல்பட்டை சொந்த ஊராக கொண்டவர் ஷேக் அப்துல் காதர் என்பவரின் மகன் அப்துல் சுபான் (93) வயதான இவர் இந்திய ராணுவத்தில் ஆட்டோ மொபைல் ஆய்வு பிரிவில் சீனியர் பிட்டராக 22 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி காஜூன்பீ (82) இவருக்கு 2மகன்கள், ஒரு மகள். திருமணமான இவர்களில் ஒரு மகனும், ஒரு மகளும் திருமணமாகி குடும்பத்துடன் தாம்பரத்தில் வசித்து வருகின்றனர். மற்றொரு மகன் குடும்பத்துடன் செங்கல்பட்டு சுண்ணாம்புக் காரத் தெருவில் சொந்தவீட்டில் வசித்து வருகிறார். எனினும் அப்துல்சுபான் தனது மனைவியுடன் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.