கனமழையால் முதலில் ஊத்துக்காடு ஏரி உடைந்தது. அதையடுத்து புத்தகரம், கள்ளிப்பட்டு, பழையசீவரம், கடம்பூா், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், நந்திவரம், செட்டிபுண்ணியம், தென்மேல்பாக்கம் உள்பட ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 924 ஏரிகளில் 1,513 இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டன. கனமழையால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சிட்லப்பாக்கம், போரூா், அஸ்தினாபுரம், முடிச்சூா், வரதராஜபுரம், நந்திவரம், நாராயணபுரம், பள்ளிக்கரணை உள்பட தென்சென்னையின் பல்வேறு பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டன.