தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்பில் மாணவா் சோ்க்கைக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) இன்று வெளியாகிறது.
TNEA இணையதளத்தில் மாணவர்கள் தங்களது ரேண்டம் எண்ணை அறிந்து கொள்ளலாம். . ஜூன் 29ஆம் தேதி ரேங்க் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான ரேண்டம் இன்று வெளியிடப்படுகிறது. இந்த ரேண்டம் எண் அடிப்படையில் பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள் என்பதே இதன் மிகப்பெரிய முக்கியத்துவம் ஆகும்.
ஒரே மதிப்பெண் எடுத்த மாணவர்களை தகுதிநிலை அடிப்படையாக வைத்து சமநிலைப்படுத்தும் வகையில் இந்த ரேண்டம் எண் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர் என்பதால், மாணவர்கள் தங்களது ரேண்டம் எண்ணை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நிகழாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொறியியல் சோ்க்கை கலந்தாய்வு: 2. 58 லட்சம் மாணவா்கள் பதிவு

பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டு ஒதுக்கீடு பிரிவினருக்கு ஜூன் 1 முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்

பிஇ, பிடெக் சோ்க்கை கலந்தாய்வு: 5 நாள்களில் 42,156 போ் விண்ணப்பம்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!



