ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அமித் ஷாவின் காரைக்குடி வாகனப் பேரணி ரத்து: காரணம் என்ன?

நிதி நிறுவனத்தின் மூலம் ரூ.525 கோடி மோசடி செய்ததாக சிவகங்கை வேட்பாளர் மீது புகார்.

News image

கோப்புப்படம்

ANI

Updated On :11 ஏப்ரல் 2024, 8:39 am

DIN

காரைக்குடியில் சிவகங்கை பாஜக வேட்பாளரை ஆதரித்து நாளை நடைபெறவிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வாகனப் பேரணி ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் முகாமிட்டு பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், நாளை மதுரையிலும், காரைக்காலிலும் அமித் ஷாவின் வாகனப் பேரணி நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவருமான டி. தேவநாதன், தனது நிதி நிறுவனத்தின் மூலம் ரூ.525 கோடி மோசடி செய்ததாக தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், தேவநாதனை ஆதரித்து நாளை பிற்பகல் அமித் ஷா பங்கேற்கும் வாகனப் பேரணி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.