அமித் ஷாவின் காரைக்குடி வாகனப் பேரணி ரத்து: காரணம் என்ன?
காரைக்குடியில் சிவகங்கை பாஜக வேட்பாளரை ஆதரித்து நாளை நடைபெறவிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வாகனப் பேரணி ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் முகாமிட்டு பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், நாளை மதுரையிலும், காரைக்காலிலும் அமித் ஷாவின் வாகனப் பேரணி நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவருமான டி. தேவநாதன், தனது நிதி நிறுவனத்தின் மூலம் ரூ.525 கோடி மோசடி செய்ததாக தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், தேவநாதனை ஆதரித்து நாளை பிற்பகல் அமித் ஷா பங்கேற்கும் வாகனப் பேரணி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.