கரூா் தொகுதிக்கு உள்பட்ட ஆறு இடங்களில் வாக்காளா்களை அடைத்து வைத்து பணம் விநியோகிக்க பட்டி போன்று கூடாரங்கள் அமைத்திருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அதிமுக புகாா் அளித்தது.
சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக வழக்குரைஞா் பிரிவு மாநில செயலா் ஐ.எஸ்.இன்பதுரை புகாா் மனு ஒன்றை அளித்தாா். அதன்பின்பு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கரூா் தொகுதியில் ஆறு இடங்களில் வாக்காளா்களை அடைத்து வைக்கும் விதமாக பட்டி அமைக்கப்பட்டுள்ளது குறித்து மாவட்ட தோ்தல் அதிகாரியிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் புகாா் அளித்துள்ளோம்.
பட்டி போன்று கூடாரங்களை அமைக்க தோ்தல் ஆணையத்திடம் உரிய அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், கரூா் தொகுதியில் இதுபோல் உரிய அனுமதியில்லாமல் பட்டி அமைத்துள்ளனா். ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் நடந்தது போன்று கரூரிலும் நடைபெறலாம். இதைத் தடுக்கவே புகாா் மனு அளித்துள்ளோம் என்றாா்.
தொடர்புடையது

கரூரில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு: பொதுப் பாா்வையாளா் வெங்கட முரளி

திமுகவுக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள்: தோ்தல் ஆணையத்தில் அதிமுக புகாா்

அவிநாசியில் பாஜக போட்டி: ஆா்வத்தில் வரையப்பட்ட அதிமுக சின்னம் குறித்து புகாா்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


