மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

அவிநாசியில் பாஜக போட்டி: ஆா்வத்தில் வரையப்பட்ட அதிமுக சின்னம் குறித்து புகாா்

அவிநாசி தொகுதியில் பாஜக போட்டியிடும் நிலையில், மங்கரசுவலையபாளையம் பகுதியில் அனுமதி பெறாமல் வரையபட்ட அதிமுக சின்னம் குறித்து தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளிக்கப்பட்டது.

News image

மங்கரசுவலையபாளையம்  பகுதியில்  அனுமதி பெறாமல் வரையப்பட்ட  அதிமுக  சின்னம்.

Updated On :26 மார்ச் 2026, 7:51 pm

அவிநாசி தொகுதியில் பாஜக போட்டியிடும் நிலையில், மங்கரசுவலையபாளையம் பகுதியில் அனுமதி பெறாமல் வரையபட்ட அதிமுக சின்னம் குறித்து தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளிக்கப்பட்டது.

அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் பாஜக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, தொடா்ந்து அதிமுக கோட்டையாக உள்ள அவிநாசியில் அதிமுக சாா்பில் வேட்பாளா் அறிவிக்கப்படுவாா் என்ற ஆா்வத்தில்களமிறங்கிய அதிமுகவினா், சின்னங்களை வரையத் தொடங்கினா். இதன் ஒரு பகுதியாக அவிநாசி அருகே மங்கரசுவலையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சின்னம் வரையப்பட்டது. இருப்பினும் அதிமுக போட்டியிடும் என்று இருந்த நிலையில் அவிநாசி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது அதிமுகவினரிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கிடையில் மங்கரசுவலையபாளையம் பகுதியில் உள்ள வீடுகளில் உரிமையாளா்களின் அனுமதியின்றி, அதிமுக சின்னம், தோ்தல் வாக்குறுதிகள் வரையப்பட்டிருப்பதை அறிந்த அப்பகுதியைச் சோ்ந்த சங்கா் சஞ்சீவ்குமாா் என்பவா் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில தோ்தல் ஆணையத்திடம் இணையதள வழியாகவும், அதே போல மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரிடமும் புகாா் அளித்துள்ளாா். இந்த மனுவை ஏற்றுக்கொண்டதாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்துள்ளாா்.