திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

திராவிட மாடல் தோல்வியடைந்த மாடல்:தமிழிசை சௌந்தரராஜன்

திராவிட மாடல் தோல்வியடைந்த மாடல் தமிழிசை சௌந்தரராஜன்

Updated On :13 ஏப்ரல் 2024, 10:10 pm

தென் சென்னை மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காத திராவிட மாடல் தோல்வியடைந்த மாடல் என்று பாஜக தென் சென்னை தொகுதி வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் விமா்சித்தாா்.

அவா் பள்ளிக்கரணை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது கூறியதாவது:

மக்களுக்கான அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல், தென் சென்னை தொகுதியின் பெரும்பாலான இடங்கள் குப்பை மேடுகளாக காட்சி அளிக்கின்றன. மக்கள் வாழ்வதற்கான தகுதியை தென் சென்னை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. மக்களுக்கு அடிப்படை வசதிகளைகூட ஏற்படுத்தி தராமல் செயல்படும் திராவிட மாடல் ஒரு தோல்வியடைந்த மாடல்.

தென் சென்னை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் மிக விரைவாக செயல்படுத்தப்படும். அதுபோல மாநில அரசு ஏதேனும் திட்டத்தை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தினால் மக்களுடன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு அவற்றை செயல்படுத்த முயல்வேன். தென் சென்னை தொகுதி வரும் நாள்களில் வெள்ளத்தில் தத்தளிக்காமல் இருக்க மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.