காட்பாடி தொகுதியில் போட்டியிட அமைச்சர் துரைமுருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.
திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிடுகின்றார்.
இந்தத் தொகுதியில் கடந்த 1996 முதல் தொடர்ந்து எம்.எல்.ஏ. ஆக இருந்துவரும் இவர் அதற்கு முன்னர் 1971, 1984 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் அங்கு போட்டியிட்டிருந்தார். இவர் ராணிப்பேட்டையில் 2 முறையும், காட்பாடியில் 9 முறையும் வெற்றி பெற்றிருந்தார்.
இந்த நிலையில், காட்பாடி தொகுதியில் 11 வது முறையாக போட்டியிடும் துரைமுருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது மகன் கதிர் ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Summary
Duraimurugan, contesting from Katpadi for the 11th time, files his nomination today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்!

ராசிபுரம் தொகுதியில் போட்டியிட இருவா் வேட்புமனு தாக்கல்

கே.என். நேரு, செங்கோட்டையன் வேட்புமனு தாக்கல்!

கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

