முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

பவள விழா, பல்லாங்குழி பாப்பாக்களை தூக்கி எறியுங்கள்! விஜய்

சென்னையில் பிரசாரத்தை நிறைவு செய்து விஜய் பேச்சு...

News image

தவெக தலைவர் விஜய் - TVK

Updated On :21 ஏப்ரல் 2026, 3:54 pm IST

75 ஆண்டுகள் பழைய பவள விழாப் பாப்பாவையும், 55 ஆண்டுகள் பல்லாங்குழிப் பாப்பாவையும் தூக்கி எறியுங்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்து தவெக தலைவர் விஜய், கட்சித் தொண்டர்களிடையே சென்னை நந்தனம் திடலில் இன்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“புதுச்சேரியில் 90 சதவிகிதத்துக்கு மேல் வாக்குப்பதிவாகியுள்ளது. அதே மாதிரி தமிழ்நாட்டிலும் நடக்கிறதா? இல்லையா? என்று பாருங்கள். வாக்குச் சாவடிக்குச் சென்று ஸ்டாலினிடம் இருந்து நமது தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.

10 முறை தோற்ற அனுபவசாலியே, சேலம் பக்கத்தில் இருக்கும் தொகுதியில் பதுங்கிக் கொள்ளாமல் வெளியே வந்து வேறிடத்தில் போட்டியிட்டு உங்களால் வெற்றிபெற முடியுமா? முதலில் நிற்க முடியுமா? அதை செய்துவிட்டு என்னைப் பற்றி பேசுங்கள். சொந்த தொகுதியிலேயே தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் தவெக சின்னத்தை திருடியவர் தானே. எடப்பாடியில் சுயேச்சையாக நிற்கும் டிவி சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

ஊழலில் ஊறிப் போன இருவரும் வேண்டாம். மாற்றத்துக்கான தேர்தலில் தவெகவைக் கொண்டு வாருங்கள்.

போகிப் பண்டிகை அன்று வீணாகப் போனதை தூக்கி வீசுவது போன்று, 75 ஆண்டுகள் பழைய பவள விழாப் பாப்பாவையும், 55 ஆண்டுகள் பல்லாங்குழிப் பாப்பாவையும் தூக்கி வீசி எறியுங்கள். புதிய ஆட்சியைக் கொண்டு வாருங்கள்.

திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம். அனைவரும் ஒரே கூட்டணியில் இருந்து ஒருவனை மட்டுமே எதிர்க்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.

Summary

Vijay speaks after concluding his campaign in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.