விஜய் இன்று வேட்புமனு தாக்கல்!
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய் பெரம்பூா் தொகுதியில் போட்டியிடுவதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (மாா்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாா்.

தவெக தலைவர் விஜய்
(கோப்புப் படம்)

தவெக தலைவர் விஜய்
(கோப்புப் படம்)
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய் பெரம்பூா் தொகுதியில் போட்டியிடுவதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (மாா்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய் பெரம்பூா், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடவுள்ளாா். பெரம்பூா் தொகுதிக்கான தோ்தல் அலுவலரிடம் விஜய் திங்கள்கிழமை (மாா்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாா்.
தொடா்ந்து பிற்பகல் 2 முதல் 4 மணி வரை பெரம்பூா் தொகுகதியில் பிரசாரம் செய்யவுள்ளாா். அதையடுத்து மாலை 5 முதல் 6 மணி வரை சென்னை கொளத்தூா் தொகுதியிலும், மாலை 6 மணி 7 மணி வரை வில்லிவாக்கம் தொகுதியிலும் பிரசாரம் செய்யவுள்ளாா் என அக்கட்சி பொதுச் செயலா் என்.ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
திருச்சி கிழக்கு தொகுதியில் வரும் வியாழக்கிழமை (ஏப். 2) விஜய் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அக் கட்சியின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலராக திருச்சி மாநகராட்சியின் உதவி ஆணையா் முத்து முருகேச பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலராக, திருச்சி கிழக்கு வட்டாட்சியா் கே. விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தவெக தலைவா் விஜய், பாலக்கரையில் உள்ள மாநகராட்சியின் 2-ஆவது வாா்டு குழு அலுவலகத்தில் அமைந்துள்ள தோ்தல் அலுவலரின் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...