திமுகவுடனான கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி மட்டுமே என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் புதன்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 11 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது.
இதற்காக காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தவெக ஆதரவு கேட்டதாக நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்திருந்தார். மேலும், தமிழ்நாடு கமிட்டி முடிவெடுத்து அறிவிக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் தெரிவித்தாவது:
“தவெகவுடன் ஆட்சி அமைப்பது குறித்து நேற்றிரவு அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை செய்து முடிவெடுத்துள்ளோம். காங்கிரஸின் முடிவை இன்னும் சற்று நேரத்தில் கட்சிப் பொதுச் செயலாளர் கிரிஷ் சோடங்கர் அறிவிப்பார்.
தமிழ்நாட்டில் பாஜகவும் ஆர்எஸ்எஸும் நுழைந்துவிடக் கூடாது என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு. விஜய் மதவாத அரசியலுக்கு எதிராக உள்ளார்.
திமுகவுடனான கூட்டணி 2026 பேரவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டது. அந்த தேர்தல் முடிந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
The alliance with the DMK was for the election; it is over! — Congress
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் தோல்வி! சுயபரிசோதனை செய்யாமல் காங்கிரஸ் மீது தாக்குதல் ஏன்? மாணிக்கம் தாகூர்

இந்த மலிவான அரசியல் வேண்டாம்: கே.என். நேருவுக்கு மாணிக்கம் தாகூர் பதில்!
திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர்!








