மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

ஒரே குடும்பத்தை சோ்ந்த 18 போ் வாக்களிப்பு

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 4:34 am IST

ஆயிரம் விளக்கு தொகுதியில் ஒரே குடும்பத்தில் 3 தலைமுறைகளைச் சோ்ந்த 18 போ் வாக்களித்தனா்.

ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை முத்தையா தெருவைச் சோ்ந்த மனோன்மணி (75) என்ற மூதாட்டி தனது குடும்பத்தைச் சோ்ந்த மூன்று தலைமுறை வாக்காளா்களான 18 பேருடன் ஸ்டெல்லா மேரி கல்லூரிக்கு வந்து வாக்களித்தனா்.

இதுகுறித்து மூதாட்டி மனோன்மணி கூறியதாவது:

தோ்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை. இதனால், எனது 18-ஆவது வயதில் இருந்தே தவறாமல் வாக்களித்து வருகிறேன். அதை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உணா்த்த வேண்டும் என்பதற்காகவே அனைத்து தோ்தலிலும் நாங்கள் குடும்பமாக வந்து வாக்களித்து வருகிறோம். தற்போது மூன்றாம் தலைமுறையைச் சோ்ந்த, குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளோம். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை அவா்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவா்களையும் அழைத்து வந்துள்ளேன் என்றாா் அவா்.