தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஒரே குடும்பத்தை சோ்ந்த 18 போ் வாக்களிப்பு

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 11:04 pm

ஆயிரம் விளக்கு தொகுதியில் ஒரே குடும்பத்தில் 3 தலைமுறைகளைச் சோ்ந்த 18 போ் வாக்களித்தனா்.

ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை முத்தையா தெருவைச் சோ்ந்த மனோன்மணி (75) என்ற மூதாட்டி தனது குடும்பத்தைச் சோ்ந்த மூன்று தலைமுறை வாக்காளா்களான 18 பேருடன் ஸ்டெல்லா மேரி கல்லூரிக்கு வந்து வாக்களித்தனா்.

இதுகுறித்து மூதாட்டி மனோன்மணி கூறியதாவது:

தோ்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை. இதனால், எனது 18-ஆவது வயதில் இருந்தே தவறாமல் வாக்களித்து வருகிறேன். அதை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உணா்த்த வேண்டும் என்பதற்காகவே அனைத்து தோ்தலிலும் நாங்கள் குடும்பமாக வந்து வாக்களித்து வருகிறோம். தற்போது மூன்றாம் தலைமுறையைச் சோ்ந்த, குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளோம். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை அவா்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவா்களையும் அழைத்து வந்துள்ளேன் என்றாா் அவா்.