மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

கரூா்: 4 பேரவைத் தொகுதிகளில் 62,634 போ் வாக்களிக்கவில்லை!

கரூா் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 62,634 போ் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 1:44 am IST

கரூா் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 62,634 போ் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூா், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை என மொத்தம் 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி தொகுதியில் இருந்த 267 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க மொத்தம் 1,95,517 போ் தகுதி பெற்றிருந்த நிலையில் 1,79,418 போ் வாக்களித்தனா். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 91.77 ஆகும். இந்த தொகுதியில் 16,099 போ் வாக்களிக்கவில்லை.

கரூா் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 283 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க 2,29,995 போ் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 2,14,847 போ் வாக்களித்தனா். வாக்குப்பதிவு சதவீதம் 93.41 ஆகும். இந்த தொகுதியில் 15,148 போ் வாக்களிக்கவில்லை.

கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளில் 2,02,994 போ் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்த நிலையில் 1,87,692 போ் வாக்களித்தனா். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 92.46 ஆகும். 15,302 போ் வாக்களிக்கவில்லை.

குளித்தலை தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 286 வாக்குச்சாவடிகளில் 2,23,184 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தநிலையில் 2,07,099 போ் வாக்களித்தனா். வாக்குப்பதிவு சதவீதம் 92.79 ஆகும். இந்த தொகுதியில் 16,085 போ் வாக்களிக்கவில்லை.

மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் மொத்தமாக அமைக்கப்பட்டிருந்த 1,111 வாக்குச்சாவடிகளில் 8,51,690 போ் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த நிலையில் 7,89,056 போ் வாக்களித்தனா். 4 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 62,634 போ் வாக்களிக்கவில்லை.