டிப்ளமோ முடித்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் 332 பணி

மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் எஸ்.இ.சி.எல் எனப்படும்
Updated on
1 min read

மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் எஸ்.இ.சி.எல் எனப்படும் தென்கிழக்கு மண்டல நிலக்கரி நிறுவனத்தில் மைனிங் சர்தார், டி அண்ட் எஸ் போன்ற கிரேடு-சி உள்ளிட்ட 332 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 30.09.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: மைனிங் சர்தார், மைன் சர்வேயிங் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.secl.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2016

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான சான்றுகள், புகைப்படம் இணைத்து
General Manager (Manpower), South Eastern Coalfields Limited, Post Box No 60, Seepat Road, Billaspur, Chhatisgarh, Pin 495 006  என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 30.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.secl.gov.in என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com