சென்னை வேலைவாய்ப்புப் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்புப் பிரிவில் அலுவலக உதவியாளர் பணிக்காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரேவற்கப்படுகிறது.
சென்னை கிண்டியில் வேலைவாய்ப்பு பயிற்சி துறையின் வேலைவாய்ப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம் நீங்கலாக)- முன்னுரிமையற்றோர், பொதுப்பிரிவு-முன்னுரிமையற்றோர் ஆகியோர் நேர்காணல் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.
இந்தப் பணியிடங்களுக்கு எட்டம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது முதல், அதிகபட்சம் 1.4.2016 அன்றைய நாளில் பொதுப்பிரிவு 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவினர் 32 வயது மிகாலும், தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினர் 35 வயதுக்கு மிகாலும் இருக்க வேண்டும்.
எனவே தகுதியானோர் சென்னை கிண்டி வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் வேலைவாய்ப்புப் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று வரும் 15-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பி வைத்து பயனடையுமாறு ஆட்சியர் (பொறுப்பு) அழகுமீனா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காமராஜருக்குப் பிறகு அதிக தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தவர் மு.க. ஸ்டாலின்! கே.எஸ். அழகிரி புகழாரம்

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை

காஞ்சிபுரம்: திருமணம் முடிந்தவுடன் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி!

பெட்ரோல், டீசல் விலை உயர்வா? அமைச்சகம் விளக்கம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

