ரூ.2.50 லட்சம் சம்பளத்தில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்? 

தமிழக அரசிற்கு உள்பட்ட வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.2.50 லட்சம் சம்பளத்தில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்? 


தமிழக அரசிற்கு உள்பட்ட வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) 

மொத்த காலியிடங்கள்: 500

பணி: Staff Nurse 

தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ நர்சிங், பி.எஸ்சி., எம்.எஸ்சி., நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு:  22 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.2,50 லட்சம் வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.com எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2021

மேலும் விபரங்கள் www.omcmanpower.com அல்லது https://www.omcmanpower.com/jobInfo.php?jid=153 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com