மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 372 செவிலியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Nurse
காலியிடங்கள்: 53
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Nurse
காலியிடங்கள்: 35
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Executive Nurse
காலியிடங்கள்: 143
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Executive Nurse
காலியிடங்கள்: 141
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நர்சிங் பணியில் அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் ரூ.118. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ilbs.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2022
மேலும் விவரங்கள் அறிய www.ilbs.in அல்லது https://www.ilbs.in/?page=hrjobs_listing என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.