விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.89 ஆயிரம் சம்பளத்தில் செபி நிறுவனத்தில் வேலை!

அந்நியச் செலாவணி ஒழுங்கு முறை ஆணையத்தில்(செபி) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.89 ஆயிரம் சம்பளத்தில் செபி நிறுவனத்தில் வேலை!


அந்நியச் செலாவணி ஒழுங்கு முறை ஆணையத்தில்(செபி) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant Manager

காலியிடங்கள்:  24

சம்பளம்: மாதம் ரூ.44,500 - 89,350

வயதுவரம்பு: 30.06.2022 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ முடித்து கம்ப்யூட்டர் அப்ளிகேசன், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணியில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். 

எழுத்துத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். 

முதல் கட்டத் தேர்வு நடைபெறும் தேதி: 27.08.2022

இரண்டாம் கட்டத் தேர்வு 24.09.2022

முதல் கட்டத் தேர்வு சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களிலும், இரண்டாம் கட்டத் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.sebi.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com