வருவாய் துறையில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வருவாய் துறையில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

மொத்த காலியிடங்கள்: 13
பணி: அலுவலக உதவியாளர் - 11
பணி: காவலர் - 02 

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி, 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை (அ- பிரிவு) முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாமக்கல் - 637 003.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.04.2022. மாலை 5:45 மணி வரை.

மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2022/03/2022030546.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com