இந்து அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? - எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை வடபழநி  அருள்மிகு ஆண்டவர் திருக்கோயிலில் நிரப்பப்பட உள்ள 23 இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? - எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி?


சென்னை வடபழநி  அருள்மிகு ஆண்டவர் திருக்கோயிலில் நிரப்பப்பட உள்ள 23 இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்து சமயத்தை சார்ந்தவர்களிடம் இருந்து வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: இளநிலை உதவியாளர் - 04
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிகப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பணி: தட்டச்சர் - 01
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஓட்டுநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில்   தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: உதவி மின் பணியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: மின்கம்பி பணியாளர் பிரிவில் ஐடிஐ முடித்து மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து 'எச்' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: நாதஸ்வரம்
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் இசைப் பள்ளிகளில் இருந்து தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவி அர்ச்சகர் - 9
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருப்பதுடன் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடச்சாலையில் தொடர்புடைய துறையில் ஒரு ஆண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். 

பணி: உதவி பரிச்சாரகம் - 2
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழ் மொழியில் எழு, படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கோயில்களின் பழக்க வழக்கங்களுக்குக் கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: வேதபாராயணம் - 2
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் ஆகமப்பள்ளி அல்லது வேடபாடசாலைகளில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.09.2022 தேதியின்படி 18 பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://hrce.tn.gov.in/ என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
துணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை -26

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 04.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/137/document_1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com