பொதுத்துறை நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை: விண்ணப்பிப்பது எப்போது..? எப்படி..? 

பொதுத்துறை நிறுவனமான பொக்கோரா இரும்பு ஆலையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை: விண்ணப்பிப்பது எப்போது..? எப்படி..? 


பொதுத்துறை நிறுவனமான பொக்கோரா இரும்பு ஆலையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.BSL/R/2022-01

பணி: Attendent-Cum Technician Trainee (NAC)
காலியிடங்கள்: 146

பயிற்சிக்காலம்: 2 ஆண்டுகள்.

உதவித்தொகை: பயிற்சியின் போது முதலாம் ஆண்டு மாதம் ரூ.12,900 வழங்கப்படும், இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,100 வழங்கப்படும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இரும்பு ஆலையில் டிரேடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, துறைவாரியான தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com