ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 631
அறிக்கை எண் 27/2022
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: உதவி புள்ளியியல் ஆய்வாளர்
காலியிடங்கள்: 211
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 75,900
பணி: கணக்கிடுபவர்
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900
பணி: புள்ளியியல் தொகுப்பாளர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900
வயதுவரம்பு: 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.
தகுதி: புள்ளியியல், கணிதம், கணினி அறிவியல், பொருளாதாரம் போன்ற ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150 + தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஏற்கனவே நிரந்த பதிவு இருப்பவர்கள் நிரந்தர பதிவு கட்டணம் செலுத்த வேண்டாம். கட்டண சலுகைகள் குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.10.2022
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 21.01.2023
மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/stat%202022%20tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு... குரூப்-3ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
பெல் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
சிறை அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... கத்தார் ஏர்வேஸ் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு