கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தொலையுணர்வு செயற்கைக் கோள் ஆய்வு மையத்தில் வேலை: முதுகலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

இஸ்ரோவின் கீழ் செயல்படும் தொலையுணர்வு செயற்கைக் கோள் ஆய்வு மையத்தில் காலியாக உள்ள 72 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 4:17 am

இஸ்ரோவின் கீழ் செயல்படும் தொலையுணர்வு செயற்கைக் கோள் ஆய்வு மையத்தில் காலியாக உள்ள 72 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.NPSC-RMT-2/2024

பணி: Research Scientist

காலியிடங்கள்: 20

சம்பளம்: மாதம் ரூ.56,100

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Remote Sensing, Geo information,Geology,Applied Geology, Botany, Forestry, Ecology, Civil Engineering போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Scientist

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.56,100

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Remote Sensing, Geo information, Computer Science பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Project Associate

காலியிடங்கள்: 15

சம்பளம்: மாதம் ரூ.31,000 - 35,100

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Remote Sensing, Geo information பாடப்பிரிவில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Research Fellow

காலியிடங்கள்: 27

சம்பளம்: மாதம் ரூ.37,000 - 42,000

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Civil Engineering, GIS, Meteorology, Atmospheric Science, Physics, Geo Physics, Chemical Sciences போன்ற ஏதாவதொரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வு ஹைதராபாத்தில் நடைபெறும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nrsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.4.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.