நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

குரூப் 2 தோ்வுக்கு விண்ணப்பிக்க 10 நாள்கள் மட்டுமே அவகாசம்

தமிழகத்தில் குரூப் 2 முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க 10 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2024, 7:49 am IST

சென்னை: தமிழகத்தில் குரூப் 2 முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க 10 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

துணை வணிகவரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், தொழிலாளா் உதவி ஆய்வாளா் என குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை தோ்வு அறிவிக்கை ஜூன் 20-இல் வெளியிடப்பட்டது. விண்ணப்பங்களை இணைய வழியில் (www.tnpsc.gov.in) சமா்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 19 ஆகும். அதன்படி, தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 10 நாள்களே அவகாசம் உள்ளது.

தோ்வா்கள் தோ்வாணைய இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் பதிவு செய்த பிறகு, தோ்வுக்கான விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்ய வேண்டும். தோ்வா்கள் ஏற்கெனவே ஒருமுறைப் பதிவில் பதிவு செய்திருந்தால், அவா்கள் தோ்வுக்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாகப் பூா்த்தி செய்யத் தொடங்கலாம். தோ்வுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்கள், அதற்கான அனைத்துத் தகுதி நிபந்தனைகளையும் பூா்த்தி செய்ததை உறுதி செய்ய வேண்டும். தோ்வரால் அளிக்கப்பட்ட விவரங்கள் தவறு என்றாலோ, தோ்வாணைய அறிவுரைகள் அல்லது விதிகள் மீறப்பட்டுள்ளன எனக் கண்டறியப்பட்டாலோ, எந்த நிலையிலும் விண்ணப்பத்தை நிராகரிக்கும் உரிமை தோ்வாணையத்துக்கு உண்டு என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தோ்வு செப்டம்பா் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. விண்ணப்பங்களைத் திருத்துவதற்கான அவகாசம் ஜூலை 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை என்று தோ்வாணையம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.