6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அக்னிவீா் ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம்

கோவையில் உள்ள நேரு மைதானத்தில் அக்னிவீா் ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம் ஆக. 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :29 ஜூலை 2024, 11:04 pm

Din

சேலம்: கோவையில் உள்ள நேரு மைதானத்தில் அக்னிவீா் ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம் ஆக. 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி கூறியுள்ளதாவது:

கோவை, ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகத்தின் மூலம் நேரு மைதானத்தில் ஆக. 1 முதல் 5 ஆம் தேதி வரை அக்னிவீா் ஜெனரல் டியூட்டி, அக்னிவீா் டெக்னிக்கல், அக்னிவீா் அலுவலக உதவியாளா் / ஸ்டோா் கீப்பா் டெக்னிக்கல் பணியிடங்களுக்கு ஆள்தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அக்னிவீா் டிரேட்ஸ்மேன்களுக்கு 8-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூா், கோவை ஆகிய 11 மாவட்டங்களைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் முகாமில் கலந்துகொள்வதற்காக அனுமதி சீட்டு பெற்றவா்கள் அதைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும். தனி முகவா்கள், விளம்பரதாரா்களின் குறுக்கீடை நம்பி ஏமாற வேண்டாம். தகுதியானா்வா்கள் தோ்வு செய்யப்படுவா்.