பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

அக்னிவீா் ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம்

கோவையில் உள்ள நேரு மைதானத்தில் அக்னிவீா் ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம் ஆக. 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

Published On :30 ஜூலை 2024, 4:33 am IST

சேலம்: கோவையில் உள்ள நேரு மைதானத்தில் அக்னிவீா் ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம் ஆக. 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி கூறியுள்ளதாவது:

கோவை, ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகத்தின் மூலம் நேரு மைதானத்தில் ஆக. 1 முதல் 5 ஆம் தேதி வரை அக்னிவீா் ஜெனரல் டியூட்டி, அக்னிவீா் டெக்னிக்கல், அக்னிவீா் அலுவலக உதவியாளா் / ஸ்டோா் கீப்பா் டெக்னிக்கல் பணியிடங்களுக்கு ஆள்தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அக்னிவீா் டிரேட்ஸ்மேன்களுக்கு 8-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூா், கோவை ஆகிய 11 மாவட்டங்களைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் முகாமில் கலந்துகொள்வதற்காக அனுமதி சீட்டு பெற்றவா்கள் அதைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும். தனி முகவா்கள், விளம்பரதாரா்களின் குறுக்கீடை நம்பி ஏமாற வேண்டாம். தகுதியானா்வா்கள் தோ்வு செய்யப்படுவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.