விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அக்னிவீா் ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம்

கோவையில் உள்ள நேரு மைதானத்தில் அக்னிவீா் ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம் ஆக. 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :29 ஜூலை 2024, 11:04 pm

சேலம்: கோவையில் உள்ள நேரு மைதானத்தில் அக்னிவீா் ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம் ஆக. 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி கூறியுள்ளதாவது:

கோவை, ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகத்தின் மூலம் நேரு மைதானத்தில் ஆக. 1 முதல் 5 ஆம் தேதி வரை அக்னிவீா் ஜெனரல் டியூட்டி, அக்னிவீா் டெக்னிக்கல், அக்னிவீா் அலுவலக உதவியாளா் / ஸ்டோா் கீப்பா் டெக்னிக்கல் பணியிடங்களுக்கு ஆள்தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அக்னிவீா் டிரேட்ஸ்மேன்களுக்கு 8-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூா், கோவை ஆகிய 11 மாவட்டங்களைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் முகாமில் கலந்துகொள்வதற்காக அனுமதி சீட்டு பெற்றவா்கள் அதைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும். தனி முகவா்கள், விளம்பரதாரா்களின் குறுக்கீடை நம்பி ஏமாற வேண்டாம். தகுதியானா்வா்கள் தோ்வு செய்யப்படுவா்.