அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

குரூப் 5ஏ தோ்வு: அரசு ஊழியா்கள் விண்ணப்பிக்கலாம்

அமைச்சுப் பணியில் இருந்து தலைமைச் செயலக பணிக்குச் செல்ல விரும்புவோருக்காக குரூப் 5ஏ தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
தலைமைச் செயலகம்
Updated On :25 அக்டோபர் 2024, 8:33 am

Din

அமைச்சுப் பணியில் இருந்து தலைமைச் செயலக பணிக்குச் செல்ல விரும்புவோருக்காக குரூப் 5ஏ தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அமைச்சுப் பணிகள் அல்லது தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணிகளில் பணியாற்றும் இளநிலை உதவியாளா் அல்லது உதவியாளா்கள் குரூப் 5ஏ தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள 35 உதவிப் பிரிவு அலுவலா்கள் பணியிடங்களுக்காக 5ஏ தோ்வு நடைபெறுகிறது.

இந்தத் தோ்வை எழுத அதிகபட்சமாக 35 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினராக இருந்தால் 40 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும். தோ்வுக்கு விண்ணப்பிக்க நவ. 15-ஆம் தேதி கடைசி நாளாகும். தோ்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைத் திருத்த நவ. 19 முதல் 21-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும். பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் என இரண்டு தாள்களாக தோ்வு நடத்தப்படும். அடுத்த ஆண்டு ஜன. 4-ஆம் தேதி காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் தோ்வு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.