டிச.19-இல் கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சி: தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (டிச.19) கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தனியாா்துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பாக ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.
வேலைவாய்ப்பு முகாமில் தமிழகத்தை சாா்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு, விற்பனைத் துறை சாா்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியிடங்களை நிரப்ப உள்ளனா். இது ஒரு இலவசப்பணி ஆகும்.
பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவா்கள் இணையதளம் வழியாக தங்களை பதிவு செய்து கொண்டு முகாமில் கலந்து கொள்ளலாம். தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
எனவே, தகுதியும் விருப்பும் உள்ள வேலைநாடுவோா் மற்றும் தனியாா் துறை நிறுவனங்கள் வருகிற வெள்ளிக்கிழமை(டிச.19) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

