திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 28 உதவி மேலாளர், சட்ட அலுவலர், மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

News image

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் பணி

Updated On :19 ஜூலை 2025, 1:34 pm IST

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 28 உதவி மேலாளர், சட்ட அலுவலர்,மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்: RBISB/DA/02/2025-26

நிறுவனம்: Reserve Bank of India

குரூப் 'ஏ' பதவிகள்

பதவி: Assistant Manager (Rajbhasha)

காலியிடங்கள்: 3

பதவி: Assistant Manager (Protocol & Security)

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.62,500

குரூப் 'பி' பதவிகள்

பதவி: Legal Officer

காலியிடங்கள்: 5

பதவி: Manager (Technical-Civil)

காலியிடங்கள்: 6

பதவி: Manager (Technical-Electrical)

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.78,450

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், பிஇ, பி.டெக், எல்எல்பி மற்றும் ஹிந்தியில் முதுகலைப் பட்டம், ஹிந்தியில் இருந்து ஆங்கில மொழிப்பெயர்ப்பில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100 + 18 சதவீதம் ஜிஎஸ்டி, இதர அனைத்து பிரிவினரும் ரூ.600 + 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in, https://opportunities.rbi.org.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.7.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

The Reserve Bank of India Services Board (Board) invites applications from eligible candidates for the posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.