
விண்ணப்பித்துவிட்டீர்களா..? திரவ உந்துசக்தி அமைப்பு மையத்தில் டெக்னீசியன் வேலை!
திரவ உந்துசக்தி அமைப்பு மையத்தில் டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...

திரவ உந்துசக்தி அமைப்பு மையத்தில் டெக்னீசியன் வேலை - கோப்புப் படம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்கீழ்(இஸ்ரோ) செயல்பட்டு வரும் திரவ உந்துசக்தி அமைப்பு மையத்தில் (எல்பிஎஸ்சி) நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து செப்.4-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Technical Assistant – Mechanical – 6
பணி: Technical Assistant – Chemical – 1
பணி: Technician ‘B’ – Electronic, Mechanic – 1
பணி: Technician ‘B’ -Fitter -9
பணி: Draughtsman ‘B’- Mechanical – 1
பணி: Fireman ‘A’- 1
தகுதி: பத்தாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:
வயது வரம்பு: 14.9.2026 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.500. இதர அனைத்து பிரிவினருக்கு ரூ. 750. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.lpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.9.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applications are invited for the following posts in LPSC Units located at Valiamala near Thiruvananthapuram and at Bengaluru
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






