இந்திய வனத்துறையில் வேலை வேண்டுமா? யுபிஎஸ்சி அறிவிப்பு!

இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ் சர்வீஸ்(ஐ.எப்.எஸ்) பதவியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யு.பிஎஸ்.சி) வெளியிட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read


இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் (ஐ.எப்.எஸ்) பதவியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யு.பிஎஸ்.சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: INDIAN FOREST SERVICE EXAMINATION

காலியிடங்கள்: 150 

தகுதி: விலங்கு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், உயிரியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விவசாயம், வனம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 1.8.2023 அடிப்படையில் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

முதல்நிலைத் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர்.

முதன்மைத் தேர்வு: தமிழ்நாட்டில் சென்னை மட்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.2.2023 

மேலும் விவரங்கள் அறிய www.upsc.gov.in அல்லது இங்கே கிளிக் செய்து  தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com