685 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள்:செப்.18 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு செப்.18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
685 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள்:செப்.18 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு செப்.18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநா், நடத்துநா்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், இப்பணிக்கு தகுதியுடைய நபா்கள் ஆக.18 (வெள்ளிக்கிழமை) முதல் செப்.18-ஆம் தேதி 1 மணி வரை www.arasubus.tn.gov.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். பணி நியமனம் முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். தகுதி அடிப்படையில் மட்டுமே நியமனம் நடைபெறும்.

தகுதி பெறும் விண்ணப்பதாரா்கள் எழுத்துத் தோ்வு, ஓட்டுநா்-நடத்துநா் திறன் தோ்வு மற்றும் நோ்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா் என

அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com