பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

685 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள்:செப்.18 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு செப்.18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2023, 2:50 am

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு செப்.18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநா், நடத்துநா்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், இப்பணிக்கு தகுதியுடைய நபா்கள் ஆக.18 (வெள்ளிக்கிழமை) முதல் செப்.18-ஆம் தேதி 1 மணி வரை www.arasubus.tn.gov.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். பணி நியமனம் முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். தகுதி அடிப்படையில் மட்டுமே நியமனம் நடைபெறும்.

தகுதி பெறும் விண்ணப்பதாரா்கள் எழுத்துத் தோ்வு, ஓட்டுநா்-நடத்துநா் திறன் தோ்வு மற்றும் நோ்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா் என

அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.