எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

முதல்வா் ஈரோடு வருகை: அமைச்சா்கள் ஆலோசனை

ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், அதிமுக பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஜனவரி 6, 7 ஆகிய தேதிகளில் ஈரோடு வருகிறாா்.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன். உடன், அமைச்சா்கள் பி.தங்கமணி, கே.சி.கருப்பணன்.

Updated On :1 ஜனவரி 2021, 10:54 pm IST

ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், அதிமுக பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஜனவரி 6, 7 ஆகிய தேதிகளில் ஈரோடு வருகிறாா்.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோா் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஜனவரி 6ஆம் தேதி ஈரோடு வரும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ஈரோடு மஞ்சள் சொசைட்டிக்கு சொந்தமான திண்டல் கிடங்குப் பகுதியில் மஞ்சள் ஏலத்துக்கான கூடம் ரூ. 1.38 கோடி செலவில் கட்ட அடிக்கல் நாட்டுகிறாா். பின்னா் பொதுமக்கள், அதிமுகவினா், இளைஞா், இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவினருடன் கலந்துரையாடுகிறாா். பவானி, அந்தியூா், கோபி, பவானிசாகா் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதி நிா்வாகிகளுடன் கலந்துரையாடுவதுடன், தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

ஜனவரி 7ஆம் தேதி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை தொகுதிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா். அத்துடன் மாநகராட்சிப் பகுதிக்கான ரூ. 540 கோடி மதிப்பிலான ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டப் பணி, ரூ. 4.5 கோடி மதிப்பிலான வ.உ.சி. பூங்கா பணிகளைத் திறந்துவைக்கிறாா். தவிர வேறு சில நிகழ்ச்சிகளிலும் முதல்வா் பங்கேற்க உள்ளாா் என்றனா்.

கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, ராஜா (எ) ராஜாகிருஷ்ணன், ஈரோடு மாநகர அதிமுக பகுதி செயலாளா்கள் கே.சி.பழனிசாமி, ரா.மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.