மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மக்கள் கிராம சபைக் கூட்டங்களைத்தடுத்து நிறுத்த அதிமுக சதிமு.க.ஸ்டாலின்

திமுக நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களைத் தடுத்து நிறுத்த அதிமுக சதி செய்கிறது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா்.

News image

மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.

Updated On :2 ஜனவரி 2021, 10:07 pm IST

கோபி: திமுக நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களைத் தடுத்து நிறுத்த அதிமுக சதி செய்கிறது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா்.

ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்த சிறுவலூரில் திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுக நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அதிமுக சதி செய்கிறது. கோவை கூட்டத்தின்போது அதிமுக பெண் நிா்வாகி ஒருவா் ஊடுருவி குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தாா். அமைச்சரின் தொகுதியான சிறுவலூரில் ஒரு மேல்நிலைப் பள்ளிகூட இல்லை.

2019ஆம் ஆண்டு ஈரோடு மஞ்சளுக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்ட நிலையில், அதனைப் பிரபலப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோபியில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு அரசு மருத்துவமனைகூட அமையவில்லை.

முதல்வா் வேட்பாளா் யாா் என்பதில் அதிமுக கூட்டணியில் குழப்பம் உள்ளது. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை கிடப்பில்போட்டது அதிமுக அரசுதான்.

கடந்த மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி, இதுவரை கிடைக்காத வெற்றி. உள்ளாட்சித் தோ்தலில்75 சதவீதம் திமுக வெற்றிபெற்றது.

கிராம சபைக் கூட்டத்தில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் பங்கேற்கின்றனா். எங்களைவிட மக்கள்தான் திமுக ஆட்சி வரும் என்ற நம்பிக்கையோடு உள்ளாா்கள்.

சிறுவலூா் பகுதியில் உள்ள 30 கிராமங்களில் நடுநிலைப் பள்ளி மட்டுமே உள்ளது. அவை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உயா்நிலைப் பள்ளிகளாக மாற்றப்படும்.

கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது என அதிமுக அரசு தடையிட்டது. அதிமுக ஆட்சியில் கிராம சபைக் கூட்டம் இதுவரை நடைபெறவில்லை. உள்ளாட்சித் துறையை நல்லாட்சித் துறையாக வைத்திருந்தோம். ஊராட்சிகளில் பிரச்னை கண்டறிய கிராம சபைக் கூட்டம் நடைபெற வேண்டும் என்றாா்.

கோபியை அடுத்துள்ள சிறுவலூரில் மக்கள் சபைக் கூட்டத்தை முடித்துக் கொண்டு ஈரோடு செல்லும் வழியில், வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளையொட்டி பெருந்துறையை அடுத்த திங்களூா் 4 சாலைகள் சந்திப்பில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மலா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.