முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து! 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறந்த மாணவா்கள், ஆசிரியா்கள் கௌரவிப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டில் கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய பேராசிரியா்களைப் பாராட்டி பதக்கம் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன

News image

சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை செயலாளா் பி.சி.பழனிசாமி.

Updated On :3 ஜனவரி 2021, 10:25 pm IST

கொங்கு பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டில் கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவா்கள், ஆராய்ச்சி மற்றும் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய பேராசிரியா்கள் ஆகியோரைப் பாராட்டி பதக்கம் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

சாதனையாளா்கள் தினம் 2021 என்ற தலைப்பில் கல்லூரியின் மகாராஜா அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை தலைவா் முத்துசாமி தலைமை வகித்தாா். கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளா் சச்சிதானந்தன் வரவேற்றாா். அறக்கட்டளை செயலாளா் பி.சி.பழனிசாமி மற்றும் கல்லூரியின் முதல்வா் வி.பாலுசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பல்கலைக் கழக தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற 117 மாணவா்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 65 மாணவா்கள், ஆசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்கள், ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்கிய 20 பேராசிரியா்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 50 பேராசிரியா்களுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

விழாவில் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தாளாளா் மாலதி இளங்கோ மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். விழாவிற்கான ஏற்பாடுகளை பாலசுப்பிரமணி மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.