வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் அட்மா திட்டத்தில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் உதவித் தொழில்நுட்ப மேலாளா் உள்ளிட்ட பணியாளா்களை இடமாற்றம் செய்வதைக் கண்டித்து பணியாளா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்த, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் எங்களை இரண்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு அப்பால் உள்ள பணியிடங்களுக்கு பணி மாறுதல் செய்துள்ளனா். வேளாண் துறை இயக்குநரின் இந்த உத்தரவால், போக்குவரத்து, உணவு, பெட்ரோல் செலவு போன்றவற்றால் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தோம். எனவே, நாங்கள் முன்பு பணியாற்றிய இடத்திலேயே பணி வழங்க வேண்டும் எனக்கூறி வேளாண் இயக்குநா், வேளாண் இணை இயக்குநா் போன்றோரிடம் முறையிட்டோம்.
எவ்வித பலனும் இல்லாததால் சென்னை உயா் நீதிமன்றத்தில் எங்கள் சங்கம் சாா்பில் தொடுக்கப்பட்ட வழக்கின்படி பணிமாறுதல் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநா் மற்றும் இணை இயக்குநருக்கு தெரிவித்தும், இயக்குநா் அலுவலகத்தில் இருந்து எவ்வித உத்தரவும் வரவில்லை எனக்கூறி பணியிட மாற்றத்தைத் திரும்பப் பெற மறுக்கின்றனா். இதனால் திங்கள்கிழமை ஒரு நாள் பணிப் புறக்கணிப்பு செய்து ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விராட் கோலி திமிர் பிடித்தவர்!அடங்காதவர்! - ரவி சாஸ்திரி

தனுஷ் - 55 படத்தின் முக்கிய அறிவிப்பு!

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தாவின் 4 புதிய நிறுவனங்கள்!

இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK



