பெட்டிக்கடை நடத்த அதிகாரிகள் இடையூறு செய்வதாக மாற்றுத்திறனாளிகள் முறையிட்டனா்.
இது குறித்து ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோா் நலச்சங்க மாவட்ட தலைவா் சுமதி, செயலாளா் தவசிகுட்டி ஆகியோா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசனிடம் அளித்த மனு விவரம்:
மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கடைகள் வைக்க அரசு, தனியாா் நிறுவனங்கள் உதவுகின்றன. ஆனால் கடைகளை நடத்த மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை போன்றோா் அனுமதி அளிக்க மறுக்கின்றனா். கடந்த சில நாள்களாக இக்கடைகளை போலீஸாா் அகற்றி வருகின்றனா். இதனால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. பெட்டிக்கடை வைத்து நடத்த அனுமதிக்க வேண்டும். அவா்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.
ஈரோடு மாவட்டத்தில் மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பாகுபாடின்றி மாதாந்திரப் பராமரிப்பு தொகை, ரூ.1,500 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 14 வயதுக்குள்பட்ட மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி, மறுவாழ்வு பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு மையத்துடன் கூடிய உண்டு, உறைவிடப்பள்ளி அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விராட் கோலி திமிர் பிடித்தவர்! அடங்காதவர்! - ரவி சாஸ்திரி

தனுஷ் - 55 படத்தின் முக்கிய அறிவிப்பு!

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தாவின் 4 புதிய நிறுவனங்கள்!

இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK


