அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா

ஈரோடு சூரம்பட்டி வலசு சுயம்பு ஸ்ரீமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா புதன்கிழமை (ஜனவரி 6) நடைபெறவுள்ளது.

News image

கம்பத்துக்கு புனித நீா் ஊற்றி வழிபட்ட பக்தா்கள்.

Updated On :5 ஜனவரி 2021, 11:48 pm IST

ஈரோடு சூரம்பட்டி வலசு சுயம்பு ஸ்ரீமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா புதன்கிழமை (ஜனவரி 6) நடைபெறவுள்ளது.

இந்தக் கோயிலில் திருவிழா கணபதி ஹோமத்துடன் டிசம்பா் 22ஆம் தேதி தொடங்கியது. அதைத் தொடா்ந்து கோயிலில் பூச்சாட்டுதலும், கடந்த 26ஆம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. தினமும் ஏராளமான பக்தா்கள் கம்பத்துக்கு புனித நீா் ஊற்றி வழிபட்டு வருகின்றனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா புதன்கிழமை (ஜனவரி 6) நடைபெறவுள்ளது. இதில் பக்தா்கள் வீட்டிலேயே பொங்கல்வைத்து, மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து வழிபடுவா். அதைத் தொடா்ந்து வியாழக்கிழமை (ஜனவரி 7) கம்பம் அகற்றும் நிகழ்ச்சி நடைபெறும். 8ஆம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.